
வேறென்ன செய்ய
இரவும் பகலும்
மாறி மாறி
உன்னை நினைவூட்ட..
நீ சிரித்த பொது அழகிய நிலவும்
தன்னை மறந்து
விழுந்து விடலாம்
சிவந்த உன் கன்னங்கள்
சூரிய குடும்பத்தில்
ஒரு கடைக்குட்டி போல...
நானோ உன் போல அல்ல
என்னிடம் அடிமைகள் என
எவரும் இல்லை
உன்னை போல...
சிதறிய நீர்த்துளிகளை போல
முத்துக்கள் பரப்பிய
உன் சிரிப்புகளாய்
உலகமே உன் கையில்
மையம் கொள்ள
நீயோ என் விழிகளுக்குள்
தங்கிக்கிடக்கிறாய்...
உன்னால் விடியாத இரவும்
விடிந்த பகலுமாய்
உலகமே உன்னைத்தேடி
அலையை
அவர்களிடம் பதில் கூற
என்னிடம் மொழி இல்லை...
கண்களை திறந்து
உன்னை தாரை வார்க்க
வழிகளும் இல்லை
உன்னை நான் சிறை வைக்க
என்னை நீ வாரி எடுத்து விட்டாய்
உன் மனச்சிறையில்...
வழிகளும் புரியவில்லை
வரிகளும் தெரியவில்லை
கால்கள் மறந்து என்னைத்தேட
உன் கண்கள் மட்டுமே என்
வழிகாட்டியானதே...
இப்படிக்கு,
கிறுக்கன்.
No comments:
Post a Comment