CounteR

free html visitor counters

Thursday, February 18, 2010

சமத்துவப்பள்ளி


கேரள மண்ணில்
இரு நாள் கண்ட சொர்க்கம்
மறு நாள் இரவில் தொலைய
இரயில் பயணம் கேட்ட
என் விழிகளுக்கு பதில் கூற
வழி இன்றி
கட்டி விட்டேன் மூட்டையை...

இரயிலோ என் தோழியையும்
விஞ்சி விட்டது
அவள் கூட விரைந்து விடுவாள்
என்னைகான...

மறு அழைப்பு

என்ன ஒரு பிறவி நான்
அந்நிய மாநிலத்தில் தான்
தாயின்  நினைவு வர...

சென்னையின் பயணசீட்டை
கிழித்தெறிந்து
உடன் வந்த தோழனுக்கோ
கையசைவுடன் வழியனுப்பி
சொந்த மண் தேடி விரைந்து வந்தேன்...

காற்றின் மதுவோ விடிந்தும்
என்னை மயக்க
தாண்டிய  என் ஊருடன்
பேருந்தில் இருந்து
துரத்தப்பட்டேன்... 

Monday, February 8, 2010

சொகுசு பேருந்து


இரண்டு மணிநேரம்
பயணமே
கிளைத்த என் வாரங்களை
முடிவு செய்தன...

மாற்றிக்கொண்டேன் நொடிக்கொரு இருக்கை
வெயிலுக்கு பயந்து
இருந்தும் சிக்கிக்கொண்டேன்
நடத்துனரின் அர்ச்சனையில்
செவிகளை மடக்கி அமர்ந்தேன் ஓரிடத்தில்...

முற்பது ருபாய் என் பயணத்தை முடிவு செய்தது
சென்னை என் கைக்குள் வந்தது
நரகமாகிய சொர்க்கம்
அன்றில் இருந்து
இனிக்கத்தொடங்கியது...


விடியாத இரவு



வேறென்ன செய்ய
இரவும் பகலும்
மாறி மாறி
உன்னை நினைவூட்ட..

நீ சிரித்த பொது அழகிய நிலவும்
தன்னை மறந்து
விழுந்து விடலாம்
சிவந்த உன் கன்னங்கள்
சூரிய குடும்பத்தில்
ஒரு கடைக்குட்டி போல...

நானோ உன் போல அல்ல
என்னிடம் அடிமைகள் என
எவரும் இல்லை
உன்னை போல...


முதியவன்

 ஒரு நாளில்
முதியவன் ஆகி விட்டேன்
இன்று காலை
விபத்திற்குப் பிறகு...

பொறுமை கவனம்
நிதானம் அர்த்தம்
என அனைத்தும்
என் சட்டைப்பைகளில்...

கூடிய விரைவில் அவை
வெளி நடப்பு செய்யலாம் 
நான் குணமடைந்தால்...

இப்படிக்கு,
கிறுக்கன்...

நெருப்பின் நடுவில் குடை

 காய்ந்து கிடந்த சிறகை சாகடித்தேன்
அவள் பினால் நடந்த
என் அடிமை கண்களால்
கண்களை இழந்த
ஒரு பேதை போல
திசை எங்கும் புரியாது
அவள் பின்னே தொடர்ந்தேன்...

நீட்டிய என் கடிதங்களுக்கு
எறிந்த உன் கண்களும்
கடிந்த உன் உதடுகளுமே
பதிலாகின
பதில் அறிந்தும்
வினா தேடிய எனக்கு
கிடைத்ததோ
இன்னொரு பதிலாக
திருமண பத்திரிக்கை...


கரைகள் இல்லாத காதல்

அவளை நினைத்து 
நான் மூழ்கிய நாட்கள் 
ஆழம் அறியாத 
படகை போல 
இந்த காதலில் 
கரைகள் இல்லை... 


அறுசுவையில் 
ஒரு உப்பும் இல்லை 
நீர்க்குமிழிகள் கூட 
விண்ணை நோக்கி பறக்கிறன 
சிறகுகள் அன்றி... 


கண்ட திசையெட்டும் 
கிழக்காய் தெரிய 
கண் கட்டிய ஒட்டகம் போல 
ஓர் பாலைவனப்பயணம்.... 


இப்படிக்கு,
கிறுக்கன்.

கடிதம்

கடிதம் என் இயற்கை அன்னைக்கு
இயற்கையே
என் இனிய தோழியே
வழியெங்கும் உன் பாத சுவடுகள்..
ஒவ்வொன்றும்
வேர் இல்லாத பாதரச பூக்கள்
மீதும் அழாதே
இன்னோர் சுனாமியை தாங்க
உறுதி கொண்ட நெஞ்சமும் இல்லை
பிணங்களின் மேல் நடக்கும்
இறந்த இதயங்களும் இல்லை
புற்களை கூட கடிக்காதே