CounteR

free html visitor counters

Monday, December 14, 2009

உறைந்த நொடிகள்



உறைந்த நொடிகள்



முத்து போன்ற சிரிப்பை
தொலைத்த உன்னிடம்
மீண்டும் பெற காத்திருக்கும்
என் புன்னகை...
காக்க வைத்தும் அழ வைக்கிறாய்
அழுது கொண்டே காத்திருக்கிறேன்
உனக்காக...
விடுகதை கூறும்
உன் மௌனத்திடம்
மண்டியிடுகிறேன்
கொடுத்துவிடு தண்டனை
சிறைச்சாலைகள் இங்கு இல்லை
உன் விழிகளே இங்கு சிறையாக...

உருகிய பனித்துளியாய்
உன்னை சுற்றி
தீவாகிறேன்...
ஆண்களை அதிகமாக
பிடிக்கவில்லை உனக்கு
அது பிடித்தது
உன்னிடம்...

நீ சூடும் பூக்கள் கூட
பறிக்கும் பொது
கடிக்கிறதே...
நீ சிணுங்கும்
நேரம் பார்த்து
காத்திருக்கிறேன்
நீண்ட அலகுடன்
கொக்கு போல...

உன்னைக்கண்ட
ஒவ்வொரு நொடியும் சரிய
உன் நினைவுகள்
மட்டும் மணல் மேடாய்
உயர்ந்து நிற்கிறதே...

நேரத்தை சேமிப்பதில்
நீ சிறந்தவள் தான்...
இணையக்கடிதத்தை அனுப்பாமல்
செமிப்பவள் நீ...
இணையம் இலவசம் தான்
மறந்துவிடாதே...
இலவசத்தின் மேல் ஆசைப்படாத
அழகிய பதுமையே...

காரணமின்றி சண்டையிட்ட
களைந்த அந்த நிமிடங்கள்
நினைக்கவும் சிறிது பயம் தான்
ஏனென்றால்
அடி வாங்கியது நான் மட்டுமே...

பயிர்களை பற்றி படிக்கும் உனக்கு
என் இதயத்தை படிக்க
ஏன் இல்லை ஆர்வம்...
அனுப்ப இயலவில்லை கடிதங்கள்
கணினியையும் கொஞ்சமுடியவில்லை
தொலைபேசியும் உன்னை கண்டு
பயந்துவிட்டது போல
விட்டது ஓடம் உன்னிடம் இருந்து...
என்னிடம் அனுமான்கள் இல்லை
தூது அனுப்ப...
வேண்டுமென்றால்
முயற்சிக்கிறேன் உன்
அக்காவிடம்...

அழுக மனமில்லை
அழுதால் உனக்கு பிடிக்காதென
அறிந்த பிறகு...
நெல் மணிகளை மதிக்கிறேன்
உழவனை
கடவுளாய் காண்கிறேன்
இவை அனைத்தும்
உணர வைத்தவள் நீ...

மேகம் கொண்ட மழை நீர்
பூமி தேடி விரைவதை போல
உன் பதில் தேடி விரைகிறேன்...
பேரில் மட்டும் ப்ரியம் கொண்ட
என் ப்ரியாவிற்காக...
இப்படிக்கு,
கிறுக்கன்...