அவளை நினைத்து
நான் மூழ்கிய நாட்கள்
ஆழம் அறியாத
படகை போல
இந்த காதலில்
கரைகள் இல்லை...
அறுசுவையில்
ஒரு உப்பும் இல்லை
நீர்க்குமிழிகள் கூட
விண்ணை நோக்கி பறக்கிறன
சிறகுகள் அன்றி...
கண்ட திசையெட்டும்
கிழக்காய் தெரிய
கண் கட்டிய ஒட்டகம் போல
ஓர் பாலைவனப்பயணம்....
இப்படிக்கு,
கிறுக்கன்.
Monday, February 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment