CounteR

free html visitor counters

Saturday, October 3, 2009

பச்சைக் காஷ்மீர்


சாலையெங்கும்
மழை நீரின்
கிறுக்கல்கள்...

காவி நிறத்தில்
கவி பாடும்
கட்டிடங்கள்...

ஆடவர் உடையில்
அங்கயர் கன்னிகள்

சுடிதார் தேடும் மீசைகள்...

வழி எங்கும்
பச்சை நிறத்தில்
பரவசங்கள்...

தாண்டிச்செல்ல
மனமில்லாது வாடும்
விழிகள்...

திரும்பாதே
வேண்டுகிறேன்
கூந்தல் நிற சாலைகள்...

ஏதாவது
ஒரு வேலை
எனக்கிங்கு வேண்டும்...
என்
ஒவ்வொரு துளியும்
ஒரு இலை போல்
உதிர்வதை காண...

என் விழிகளோ
உறைந்து விட்டது
இன்று...

இது போல்
ஒரு பழ்கலைக்கழகம்
வேறு எங்கு உண்டு
தமிழகத்தில்,
வேளாண்மை பழ்கலைக்கழகம்
இதோ
கோவையில்
ஒரு
பச்சைக் காஷ்மீர்...

விடியல்

சுழன்று கொண்டிருக்கும்
கடிகார விழிகள்
சோர்வின்றி சிறகடிக்கும்
காத்தாடிகள்...

எனக்கும் கொஞ்சம்
உறக்கம் வேண்டும்
தொலைகாட்சி...

கண்களில் என்ன
தூசியோ
மூடிய விழிகளுடன்
மின் விளக்குகள்...

வெறித்த பார்வையுடன்
தொய்வு கண்ட
விரல்களின் இடுக்கில்
பேனா முனைகள்...

இவனன்றி என்
உலகம் தெளிவல்ல
மூக்கு கண்ணாடி...

மொபைல் வெளிச்சத்தில்
எழுத இடம் தந்த
நோட்டு புத்தகங்கள்...

நாடு இரவு நாயகர்களின்
பின்னணி இசை
ஒரே மொழியில்...

எங்கே அவள்
எங்கே அவள்
திரும்பி பார்க்கும்
காத்தாடி மேஜை...

தினமும்
தூக்கு தண்டனை
மாட்டிக்கொண்டிருக்கும்
சட்டைகள்...

தூங்காமல்
காத்துக்கொண்டிருக்கும்
இந்த விழிகளுக்கு
நான் என்ன கூற?

என் விடியல்
உன் விழிகளில் அல்லவா
வேண்டுகிறேன்
உன் இமைகளிடம்...

இப்படிக்கு
கிறுக்கன்...

அவளுக்கான நொடிகள்

கவிதை எழுத
இது நேரமல்ல
அவளுக்கான நொடிகள்
இது
எது கூற
அவளிடம்...

ஜன்னல் கம்பிகளை
பற்றிக்கொண்ட
விரல் நுனிகள்
ஒவ்வொரு துளியும்
நீயென
மழைத்துளிகள்...

நொறுங்கிய என்
இதயங்களை போல
இடிந்த கட்டிடங்கள்...

என்னை காண
ஓடி வந்த
வருணனின் பிள்ளைகள்
வருக பூமிக்கு...


சாலைகளோ
இன்று

தீவுகலாகின...

இரு விரல்களுக்கிடையில்
விளையாடிக்கொண்டிருக்கும்
பேனா முனைகள்...

கோஞ்சிககொண்டிருக்கும்
விசிறிக்காற்று
ஆறடி உருவில்
மீண்டும் தோழர்கள்
ஆசிரியர்கள்...

வார்த்தைகள் இன்றி
கவிதைகள் எழுத
நீ தான்
கற்றுக்கொடுத்தாய்...

இன்றோ
தாள் இன்றி
கவிதைகள் எழுதுகிறேன்
உன் இதழில்...

இப்படிக்கு

கிறுக்கன்...

கேளா வரங்கள்

அணையாத மெழுகுவர்த்தி
சுடாத நெருப்பு
பொய் கூரா பெண்கள்
உடையாத வளையல்கள்
அடக்கமான மாணவர்கள்
அமைதியான வகுப்பறைகள்
சுத்தமான சாலைகள்
அலறாத செல்போன்கள்
பார்வையற்ற ஓவியர்கள்
ஊமையான பாடகர்கள்
இவை மட்டும் போதும்
என் விழிகள்
இன்று மட்டும்
விழட்டும்

பிறப்பில் ஒரு மரணம்

என்
விழிகளை
வெறுக்கிறேன்
இன்று
எப்படி அவளை
விட்டுச்சென்றாய்

மீண்டும் விழ
ஆசைப்பட்டேன்
தவறிய பொது
பிடித்த உன் கைகள்

மரணத்தின் மடியை
மீண்டும் அழைக்கிறேன்
நீ அளித்த மாத்திரைகள்

கைதிகளுக்கு கூட
கடைசி ஆசை
நானோ இன்று
ஒரு கைதியாக

கடவுளே உன்னை அழைக்கிறேன்
என் படைத்தாய்
மீண்டும் என்
பிறப்பில் ஒரு மரணமா
மறு ஜென்மம் எனக்கு வேண்டாம்
இதற்கு மேல் ஷக்தி இல்லை

கதிரவனுக்கும் மயங்காத
ஒட்டகம்
நான் இன்றோ
தீக்குசிகளால்
அழகிய குளியல்
என் இரு கரு விழிகளில்

இப்படிக்கு
கிறுக்கன்