CounteR

free html visitor counters

Saturday, October 3, 2009

பச்சைக் காஷ்மீர்


சாலையெங்கும்
மழை நீரின்
கிறுக்கல்கள்...

காவி நிறத்தில்
கவி பாடும்
கட்டிடங்கள்...

ஆடவர் உடையில்
அங்கயர் கன்னிகள்

சுடிதார் தேடும் மீசைகள்...

வழி எங்கும்
பச்சை நிறத்தில்
பரவசங்கள்...

தாண்டிச்செல்ல
மனமில்லாது வாடும்
விழிகள்...

திரும்பாதே
வேண்டுகிறேன்
கூந்தல் நிற சாலைகள்...

ஏதாவது
ஒரு வேலை
எனக்கிங்கு வேண்டும்...
என்
ஒவ்வொரு துளியும்
ஒரு இலை போல்
உதிர்வதை காண...

என் விழிகளோ
உறைந்து விட்டது
இன்று...

இது போல்
ஒரு பழ்கலைக்கழகம்
வேறு எங்கு உண்டு
தமிழகத்தில்,
வேளாண்மை பழ்கலைக்கழகம்
இதோ
கோவையில்
ஒரு
பச்சைக் காஷ்மீர்...

No comments: