Sunday, November 22, 2009
வார்த்தை இழந்த வார்த்தைகள்
வார்த்தை இழந்த வார்த்தைகள்
மறக்கவும் முடியவில்லை
மறுக்கவும் வழிகள் இல்லை
ஈடு இணைகள் ஏதும் இல்லை
செவிகளோ
உன் பெயரை சுமக்கவில்லை
உன்னால் எழுந்து விட்டேன்
என் சுயமும் நினைவும்
இத்தனையும்
நீ கூறிய அந்த ஒரு வார்த்தை
"என்ன மறந்துடாத டா !!!!".....
இனி உன் வார்த்தைகளை
கண்ணாடி மட்டும் படிக்குமே
தொலைபேசி குரலேடுக்குமே
வேண்டாம் இப்படி ஒரு
தண்டனை...
சிரித்துக்கொண்டே
அழ வைக்கிறாய்...
அழும்போது உன் கண்ணீரின்
நினைவலைகள்...
எனினும்
கவலைகள் இனி இல்லை...
என் கண்ணீரை துடைக்க
வந்து விட்டால் ஒரு தோழி...
மலைக்கோட்டையின் மலையரசி...
மொழி அறியா ஊரில்
புது மொழி
கற்றுகொடுத்து விட்டாய்...
இந்த மொழியில்
இலக்கணம் இல்லை
எல்லைகள் இல்லை
அளவுகள் இல்லை
அழுகு இல்லை
மூன்று இதயங்களின்
துடிப்பு மட்டுமே
ஐயத்துடன் கூறுகிறேன்
மொழி அறிய மனமில்லை
மறந்து விடுவேனோ...
நினைவூட்டுங்கள்
நம்மை மறந்துகொண்டே...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment