CounteR

free html visitor counters

Saturday, October 3, 2009

விடியல்

சுழன்று கொண்டிருக்கும்
கடிகார விழிகள்
சோர்வின்றி சிறகடிக்கும்
காத்தாடிகள்...

எனக்கும் கொஞ்சம்
உறக்கம் வேண்டும்
தொலைகாட்சி...

கண்களில் என்ன
தூசியோ
மூடிய விழிகளுடன்
மின் விளக்குகள்...

வெறித்த பார்வையுடன்
தொய்வு கண்ட
விரல்களின் இடுக்கில்
பேனா முனைகள்...

இவனன்றி என்
உலகம் தெளிவல்ல
மூக்கு கண்ணாடி...

மொபைல் வெளிச்சத்தில்
எழுத இடம் தந்த
நோட்டு புத்தகங்கள்...

நாடு இரவு நாயகர்களின்
பின்னணி இசை
ஒரே மொழியில்...

எங்கே அவள்
எங்கே அவள்
திரும்பி பார்க்கும்
காத்தாடி மேஜை...

தினமும்
தூக்கு தண்டனை
மாட்டிக்கொண்டிருக்கும்
சட்டைகள்...

தூங்காமல்
காத்துக்கொண்டிருக்கும்
இந்த விழிகளுக்கு
நான் என்ன கூற?

என் விடியல்
உன் விழிகளில் அல்லவா
வேண்டுகிறேன்
உன் இமைகளிடம்...

இப்படிக்கு
கிறுக்கன்...

1 comment:

ISR Selvakumar said...

உங்கள் கவிதைகள் நன்றாக உள்ளன. தொடரந்து எழுதுங்கள்.