கவிதை எழுத
இது நேரமல்ல
அவளுக்கான நொடிகள்
இது
எது கூற
அவளிடம்...
ஜன்னல் கம்பிகளை
பற்றிக்கொண்ட
விரல் நுனிகள்
ஒவ்வொரு துளியும்
நீயென
மழைத்துளிகள்...
நொறுங்கிய என்
இதயங்களை போல
இடிந்த கட்டிடங்கள்...
என்னை காண
ஓடி வந்த
வருணனின் பிள்ளைகள்
வருக பூமிக்கு...
சாலைகளோ
இன்று
தீவுகலாகின...
இரு விரல்களுக்கிடையில்
விளையாடிக்கொண்டிருக்கும்
பேனா முனைகள்...
கோஞ்சிககொண்டிருக்கும்
விசிறிக்காற்று
ஆறடி உருவில்
மீண்டும் தோழர்கள்
ஆசிரியர்கள்...
வார்த்தைகள் இன்றி
கவிதைகள் எழுத
நீ தான்
கற்றுக்கொடுத்தாய்...
இன்றோ
தாள் இன்றி
கவிதைகள் எழுதுகிறேன்
உன் இதழில்...
இப்படிக்கு
கிறுக்கன்...
No comments:
Post a Comment