(வலிகள் கற்றுக்கொடுத்த வரிகள்...கருப்பு நிற எழுத்து வடிவில் என் கண்ணீர்துளிகள்...இதோ ஒரு கருப்பு ரோஜவிற்காக...ஒரு கிறுக்கனின் படைப்பு...இவை என் விரல்கள் நறுக்கிய ஒரு உண்மை படைப்பு...தவறேதும் இருப்பின் மனிக்கவும்...)
என் கருப்பு தேவதையே
உன் விழியின் வலிகளை
என் கண்களில் காண்கிறேன்...
என்னை அங்கே காண முடியாமல்
இப்போது உன் கருவிழிகளில்
பிணமானேன்
புதைத்து விடாதே அதற்குள்
மீண்டும் எழுவேன்...
இப்போது இங்கு எவரும் இல்லை
உன்னை தவிர
ஒரு அழகிய பதவி
உனக்கென...
கவிதை எழுத மறந்தேன்
மூன்றெழுத்து கவிதை
உன் பெயர் மட்டும் வாசிக்க...
அடித்தாலும் கடித்தாலும்
என்னவள் நீ என்றும்
எனக்கு சிறு குட்டி தான்
உன் வெறி அடங்க எது மருந்து?
என் உயிர் போதுமா...
நானும் பதவி வெறியன் தான்
அடிமை,தமையன்,தோழன்
யார் தருவார்
இத்தனை பதவிகள்...
திடீரென ஒரு புது அவதாரம்
அதிலோ என் உருவம் இல்லை
அதனால் விலகினேன்
விழிகளின் முன்னாள்
நொறுங்கிய கண்ணாடி போல...
அந்நியர்களுக்கு மட்டும்
இதயத்தில் இடங்கள்
என்ன பாவம் செய்தேன்
அடியேன்
காத்திருப்பேன் மீண்டும்
நான் உலகாய் நினைத்த
ஒருத்தி என்
உலகத்தை மறந்தாலும்
இந்த உலகம்
உனக்கெனவே சுழல்கிறது
மறந்து விடாதே
மீண்டும் சுலற்றாதே
என் கண்களை...
உதட்டில் மட்டுமே
என் பெயர் பதிவுகள்
இல்லை இதயத்தில்
காத்துக்கொண்டிருக்கிறேன்
இதய பயணத்திற்கு...
புத்தகங்கள் பேனாக்கள்
அழுகின்றன
உன் ரேகைகள்
பதம் பார்க்க
அதற்காவது அருள் கொடு...
விரைவில் வந்து விடு
என் அவதாரம் மாறுவதற்குள்
அல்லது
காத்துக்கொள்
உன் உறவுகளையாவது...
நீ தனி மரமாக நிற்க
எதற்கு இத்தனை விழுதுகள்
உன் சொந்தங்கள்...
அழகிய ரோஜாக்கள்
மூன்றிலும் இன்று
கண்ணீர் துளிகள்
இதை ஏந்திய என் கைகளோ
சிவப்பின் அடையாளமாய்
கண்ணீரை துடைக்க
முட்கள் அளித்த முத்தத்தில்
கைகளில் ஈரங்கள்...
இந்த உள்நாட்டு போரில்
நான் மட்டும்
அகதியானேன்
கரை இல்லா தீவில்
இடம் தேடி அலைகிறேன்
நானும் போராளி தான்
கொன்றுவிடு...
செல்லமாக அடி வாங்கிய
அந்த அழகான நாட்கள்
இன்றோ
தொலைத்துவிட்டேன்
இதோ
தேடிக்கொண்டிருக்கின்றேன்
தொலைத்த இடம்
மட்டும் அறியவில்லை...
நீயோ இந்த வரிகளை
வாசிக்கிறாய்
ஆனால் இந்த வரிகளோ
நம்மை வாசிக்கின்றன...
நீயும் நிலவும்
ஒன்று தானோ
சில நேரங்களில் மட்டுமே
சிரிக்கிறாய்
உண்மையில் என்னை விட்டு
மறைகிறாய்...
இதையாவது உன்னுடன்
வைத்துக்கொள்
என் இதயத்தை வீசியது போல்
இக்கடிததையும்
இன்னொருவனுக்கு வீசி விடாதே...
பிடிக்கவில்லை
என் புதிய அவதாரம்
ஆனால் மாறி விட்டேன்
இதோ உன்னால்...
காலம் தாண்டி
வந்து விடாதே
என் உலகம்
இப்போதும் இருளில்
என் விழிகளோ
இன்றும் உன்னிடமே...
இப்படிக்கு,
கிறுக்கன்...
Tuesday, July 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
idhu unmaiyileye kirukkal thaan any how good it is
all d best gowtham.
Post a Comment