Wednesday, July 22, 2009
நானும் மனிதன் தான்
நானும் மனிதன் தான்
நானும்
மனிதன் தான்
கடவுள் இல்லை...
உன்னை
அறியாத ஒரு
முட்டாள் ஆகிவிட்டேன்...
உன் கண்களை காணும்
தைரியம் இல்லாத
ஒரு கோழை
ஆகி விட்டேன்...
என் கோபங்கள்
அனைத்தும்
கானல் நீர் தான்...
என் உயிர்
உன்னை விட
என் உணர்வுகள்
எனக்கு பெரிதல்ல...
இப்போது
என்னுடன் இருப்பது
தனிமை என்னும்
ஒரு தோழி மட்டுமே
உன்னையும் இழப்பதற்கு
இழப்பதற்கு நான் துறவி அல்ல...
நான் இழந்தது
உன்னை மட்டும் அல்ல
என்னையும் தான்
நீ இன்றி நான் ஏது...
என் மூச்சுக்காற்று
அல்லவா நீ
நீ இன்றி
என் உயிர் ஏது...
இங்கோ
நீ உடைத்தெறிந்த
சிம் கார்டுகள்
அவர்களிடம் என்ன சொல்வது...
தோழியே வந்து விடு
உயிர் இன்றி தவிக்கும் எனக்கு
உயிர் தானம் செய்து விடு...
முதலில் இழந்த
ஒரு விழியால்
இன்றோ
குருடன் ஆகிவிட்டேன்...
உன்னை கண்டால்
மறு விழியும்
விலகிடுமோ
சிறு பயம் மட்டுமே...
நீ அடித்தாலும்
பின்னால் திரியும்
நாய் குட்டி ஆகிவிட்டேன்...
வேலை இன்றி
திரிந்த எனக்கு
வேலை கொடுத்து விட்டாய்
வேலைஇன்மை
இங்கு இனி இல்லை...
என்னை செதுக்கி
நீ சிலை ஆகி விட்டாய்
உன்னால் இன்றோ
தமிழில் குளிக்கிறேன்...
என்
புன்னகையும்
நீயே
அழுகையும்
நீயே
கவலையும்
நீயே
கண்ணீரும்
நீயே
அப்போது
நான் எங்கே
உன்னிடம்
என்னை மறந்தேன்
பத்திரமாக வைத்துக்கொள்
என்னை உன்னிடம்...
உனக்கென
எழுதிய கடிதங்கள்
கவிதைகள் ஆகின...
அறியாத வார்த்தைகளை
அறிய தொடங்கினேன்
புரியாத மொழிகளோ
என்று என் கைவசம்...
இன்றோ
என்னை முழு கிறுக்கன்
ஆக்கி விட்டாய்...
இப்படிக்கு,
யசுவன் / கிறுக்கன்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment