CounteR

free html visitor counters

Tuesday, July 21, 2009

கைதி

மீண்டும் உங்கள் கிறுக்கனின் சிறு படைப்பு...

கைதி

குச்சிகளை இமைக்கவில்லை
பள்ளிகளில்
முதல்வரை இமைக்கவில்லை
கல்லூரியில்
முதன் முறை ஒரு ஐயம்
உன் விழிகளை காணும் பொது
ஏன் என்று அறியவில்லை
உன் விழிகளில் மட்டும்
ஒரு அதிசயம்
என் உதடுகள் ஏனோ
மவுன வரிகள் வாசிக்கிறது...

இதற்கு பெயர்தான் விழிஈர்ப்பு விசையோ
அறிவியல் என்றுமே உண்மை தான்
உணர்கிறேன் இன்று...

என்ன ஆனது தெரியவில்லை?
தயவு செய்து கூறி விடு
உன் விழிகளை
வெற்றி பெரும் அளவுக்கு
நான் வீரன் இல்லை
அனால் உன் விழிகள் முன்
தினம் தினம் தோற்கும் அளவுக்கு
பலமும் என்னிடம் இல்லை...

நான் உள்ளங்களை மட்டும் திருடுபவன்
பிடித்து விடாதே
விட்டு விடு உன் விழிச்சிறையில் இருந்து
வேண்டுகிறேன் அடுத்த பிறவியில்
நீ கொண்டு செல்லும் புத்தகங்களாக
இருக்க கூடாதா என...

நீ திரும்பும் அந்த ஒரு நொடிக்காக
காத்திருக்கின்றேன்
பல கோடி நிமிடங்கள்
நீ அருந்தும் கோப்பைக்காக
காத்திருக்கிறேன்
கல்லூரி உணவகத்தில்...

உன் கால் வழிதடங்கள்
என் பாதைகள் ஆகின
இந்த வருடம் மழை இல்லை
உன்மேல் விழ இந்த
மழைத்துளிகளுக்கு
கூட வெட்கமோ...

இனி உயிர் வாழ
என்னால் முடியவில்லை
கத்தியை பிடித்தேன்
காயம் கண்ட உன் விரல்கள்
மருந்துகளை நீவினேன்
காய்ச்சல் கொண்ட அந்த நாட்கள்
இதோ பேருந்துகள்
அதிலும் நீ சென்ற நினைவுகள்...

இப்படி ஒரு வாழ்கை
செத்துக்கொண்டே வாழ்கிறேன்
எனக்கு வேறு வழி தெரியவில்லை
மன்னித்துவிடு மறந்துவிடாதே...

நீ காணும் அந்த ஒரு நொடி
உறைந்தால் என்ன
நீ வீசிய காகித துண்டுகளோ
காவியம் பாடுகின்றன
நீ அமர்ந்த மேசையோ
மாற்றானுக்கு மறுக்கிறது...

கல்லூரி வளாகம் எங்கும்
இதோ உன் வாசங்கள்
தயவு செய்து மூடிவிடு
உன் முகத்தை
கண்டுகொள்வான் பிரம்மன்...

இதோ அனாதை ஆகிவிட்டேன்
என் சொந்தங்களுடன்...

இப்படிக்கு,
யசுவன் / கிறுக்கன்...

No comments: