Sunday, May 9, 2010
என்ன செய்தாய் என்னை நீ
எனக்கு தெரியும்
இதைதான் நீ எதிர்பார்த்தை
கொல்லாமல் கொன்று விட்டாய்
பார்வைகளை பறித்து என் நெஞ்சத்தை
தின்று தீர்த்தாய்
என்னுள் உன்னை துளைத்து விட்டாய்
இருந்தும்
கண்களில் உன்னை அடைத்து விட்டேன்
சுவாச மூச்சாய் நிறைந்து விட்டேன்
உன் விழிகளில் என் முகவரி
தொலைத்து விட்டேன்
இவை யாவும் எவரும் எழுத முடியும்
பெரிதாக நீ என்ன செய்து விட முடியும்
என்னை நீ?
மெலிதாய் கூட சிரிக்காமல்
கண்களால் மட்டும் சிரித்து மெலிதாய்
திரும்புவாய்
உன் பாதை பின்னால் நடக்க மாட்டேன்
உன் பாதையே ரேகைகள் தானே
மிஞ்சி உன்னால் என்ன செய்ய முடியும்
மூச்சுக்காற்றும் அஞ்சும் வண்ணம் நெருங்கி
பின்னந்தலை கொதி
தலை சாய்த்து மூக்கில் சண்டையிடும்
உன் குழந்தைதனத்தில்
திடீரென முளைக்கும் வீரமென
கோபம கொண்டால் குழையும்
உன் இரு உதடுகள் போல இருவரும் பின்னிபினையும்
அன்றும் கூட காற்று கடிதங்களுடன்
காத்திருக்கும்
உயிர் வாழ காற்று அவசியம் ....
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
super
Post a Comment